Posts

மங்கள தேவி கோட்டத்தின் கீழ்ப்பகுதியல் குமுளி மலைத் தொடரும். மேற்பகுதியில் தேக்கடி மலைத் தொடரும் காடுகளால் சூழப்பட்டு இருந்தன.   அன்று குமுளி மலைப்பகுதி காடு பரபரப்பாயிருந்தது. காரணம் காட்டுக்குள்ளே அன்று தேர்தல் நடந்தது.   மிருகங்களும், பறவைகளும் மற்றும் புழு பூச்சிகளும் கூட தேர்தலில் கலந்து கொண்டன.    வேங்கைப்பள்ளம் என்ற இடத்தில் இந்தத் தேர்தல் நடந்தது. தோதகத்தி மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் செந்நாய்கள் அதிகம் இருந்தன.   ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தல். தேர்தலை இந்த முறை செந்நாய்கள் ஏற்பாடு செய்திருந்தன.   இந்தத் தேர்தலில் சுகாதார மந்திரிக்கு மட்டும் மும்முனைப் போட்டி வந்துவிட்டது. சுகாதார மந்திரிக்குப் போட்டி இடுபவர் தங்களை தூய்மையானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்.   அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும்.சுகாதார மந்திரிப் பதவிக்கு பன்றியும், பட்டாம் பூச்சியும், காக்கையும் போட்டியிட்டன.   போட்டியைத் தவிர்க்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. எனவே ஓட்டு எடுப்பு நடத்துவது அவசியமாகி விட்டது.  ...
ஒருவரை குறை கூறும் முன் இதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் , இனி உங்கள் வாயால் ஒருவரையும் நீங்கள் குறையே கூற மாட்டீர்கள் !   ஒருவரை ஊக்குவிப்பது என்பது அவருடைய வாழ்க்கையை நீங்கள் மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பை பெறுகிறீர்கள் என்று அர்த்தம் .   அதுவே நீங்கள் ஒருவரை குறை கூறுகிறீர்கள் என்றால் ஒருவருடைய வாழ்க்கையில் விளையாடப் போகிறீர்கள் என்று அர்த்தம் .   அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் விளையாடக்கூடிய உரிமையை நமக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை !   நம்மிடம் இருக்கும் குறைகள் ஏராளம் என்று இருக்கும் பொழுது , அடுத்தவர்களை எப்படி நம்மால் குறை கூற முடிகிறது ?   ஒருவரிடம் இருக்கும் குறைகளை விட , அவர்களுடைய நிறைகளை பார்த்து அவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும் .   குறை காணும் உலகில் எதையும் காண இயலாது .   அதிலும் வேற்று மனிதர்கள் அல்லாமல் நம்முடன் இருக்கும் நம்முடைய சொந்த இரத்தபந்த உறவுகளே இப்படி நம்மை குறை கூறும் பொழுது இருக்கின்ற தன்னம்பிக்கையையும் இழந்து , சோர்ந்து போய் ...